Sunday, October 08, 2006

குழந்தைகள் வளர்ப்பு

குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் சந்தோஷம் தான் வரும்.அவர்கள் செய்யும் சின்ன சேட்டைகள் கூட சந்தோஷத்தை கொடுக்கும்.அந்த காலத்தில் குழந்தைகளை பெத்தோமா அவர்களை வள்ர்த்தோமா நல்ல ஒரு வாழ்க்கை அமைத்துக்கொடுத்தோமா என்று நினைப்பர்.ஆனால் இப்பொழுது ஒரு குழந்தை இருந்தாலும் அதற்கு தெரியாதது ஒன்றும் இருக்ககூடாது என்று நினைக்கின்றனர்.முன்னுள்ள காலத்தில் பிள்ளைகளை படிக்க வைக்கிறோமோ இல்லையோ அவர்களுக்கு நிறைய சம்பாதித்து சொத்துக்கள் நிறைய வவத்து விட்டு போய்விடுவார்கள்.அதற்கு சண்டை போட்டுக்கொண்டு கூடபிறந்த எண்ணம் கூட இல்லாமல் உறவு முரிந்துவிடும்.
ஆனால் இப்பொழுது ஒன்றோ இரண்டோ மூன்றோ இருந்தாலும் அதற்கு சேர்த்து வைக்கிறார்களோ இல்லையோ அவர்களுக்கு எல்லாவிதமான கலைகளை கத்துக்கொடுத்துவிடுகின்றனர்.அதனால் பெற்றோர்களை எதிர்பார்ப்பதை குறைத்துகொள்கின்றனர்.இதானால் காலாகாலதிற்கு சொந்தங்கள் நிலைத்திற்கும்.
சரி இப்பொழுது குழந்தைகள் வளர்ப்பு பற்றி பார்ப்போம்.
உணவு முறை;யாரை கேட்டாலும் என்பிள்ளை சாப்பிடமாட்டேங்கிறா.இது அனைவருக்கும் நடக்கும் பிரச்சினை.இதற்கு எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.இப்பசொல்லபோறது சில பேருக்கு தெரிந்திருக்கலாம் தெரியாமலும் இருக்கலாம்.தெரியாமல் இருந்தால் தெரிந்துக்கொள்ளுங்கள்.தெரிந்திருந்தால் எனக்கு சொல்லுங்கள். முதலில் சாப்பாட்டில் வற்புறுத்துவது நல்லதல்ல.அவர்கலின் எண்ணம் வாக்கில் விடவெண்டும் என்று சொல்வர்.ஆனால் நான் சொல்வது எதையும் வித்தியாசமாக செய்து கொடுங்கள்.குழந்தைகள் விரும்புவர்... . .உடைகளில் வண்ணத்தை தேர்ந்தெடுத்து கொடுப்பது போல் உணவிலும் வண்ணம் சேருங்கள்.
பொதுவாக மாவு பொருட்களில் எடுத்து கொள்வோம்.
இட்லியை வெறுமையாக செய்துகொடுத்தால் சில குட்டீஸ்கலுக்கு பிடிக்கும்;பிடிக்காமலும் இருக்கும்.ஆனால் நான் சொல்வது சிலருக்கு தெரிந்திருக்கலாம்.தெரியாதவ்ர்களுக்கு இட்லியில் சில காய்ந்த திராட்சை மற்றும் சில வண்ண ம் கலந்த பழங்களை சேர்த்து செய்து கொடுத்தால் அவர்கள் விரும்புவர்.
இனிப்பு விரும்புவர்களுக்கு தோசை ஊற்றும் பொழுது அதில் கொஞ்சம் சக்கரை தூவி செய்து கொடுத்தால் விரும்புவர்.
சப்பாத்தி செய்துகொடுக்கும் பொழுது அதில் கொஞ்சம் இனிப்புடன்பிசைந்து செய்து கொடுத்தால் நல்லது.வண்ணம் விரும்பினால் அதில் பழங்களை சேர்த்துக்கொள்ளலாம் .வாழைப்பழங்கள் விரும்பாதவர்களுக்கு சப்பாத்தி மாவில் இந்த பழங்களை சேர்த்து பிசைந்து சுட்டுக்கொடுத்தால் நல்லது. இதை செய்து பாருங்கள்.
உணவு முறைகளில் கொஞ்சம் வித்தியாசமாகவும்
சத்துள்ளதாகவும் செய்து கொடுத்தால் நல்லது.
இப்பொழுது ;ஒரு சின்ன வைத்திய முறை.
குழந்தைகளுக்கு வயிற்றில் புளிப்பு ஏற்பட்டால் அல்லது
பசியில்லாமல் இருந்தாலோ கொஞ்சம் இஞ்சியுடன் பூண்டை சேர்த்துஅரைத்து சார் எடுத்து அதனுடன் தேன் சேர்த்து கொடுத்தால் நல்லது.முதன் முறையாக கொடுக்கும் பொழுது கொஞ்சமாக இஞ்சி செர்த்து கொடுக்க வேண்டும்.ஒரு வயதுக்கு உள் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.இதை நான் பின்பற்றுவதால் உங்களுக்கு சொல்லியுள்ளேன்.

Monday, September 11, 2006

கணவன் -மனைவி

என்ன உறவையே வைத்து எழுதுகிறேனே என்று நினைக்கவேண்டாம்.இப்ப உள்ள கலி காலத்தில் இந்த உறவுக்கு மதிப்பு என்பது குறைந்து கொண்டே வருகிறது.
எல்லா உறவை விட இந்த உறவு மிகவும் முக்கியமானது மற்றும் வலிமையானதும் கூட.ஏனென்றால் இந்த உறவு எந்த இரத்த பந்தமும் இல்லாமல் நம்பிக்கையில் உண்டாவது.இதை புரிந்து கொண்டு வாழ்பவரும் உண்டு, புரியாமல் பிரிந்தவரும் உண்டு.
''கணவனே கண் கண்ட தெய்வம்'' மற்றும் ''கல்லானாலும் கணவன் ;புல்லானாலும் புருசன்'' என்று சொல்வர்.ஆனால் இப்பொழுது இது எல்லாம் கணவில் தான் காண முடிகிறது.
திருமண வாழ்கை என்பது இரு மணமும் இணைவது.அந்த காலத்தில் என்ன நேர்ந்தாலும் கணவனையே கடைசி வரை என்று நினனத்தனர்.இப்ப கணவனின் நடவடிக்கை பிடிக்கவில்லையா அல்லது தனக்கு ஒத்து வரவில்லையா உடனே விவாகரத்து.
குடிக்கும் புருசனை விரும்பாத பெண்கள் இப்பொழுது குடிக்க தெரியுமா ஸ்டைலா இருக்கதெரியுமாஎன்ற முழு விவரம் தெரிந்துதான் கல்யாணம் செய்கின்றனர்.ஆண்கள் மட்டும் என்ன குறைந்தவர்களா என்ன?அவர்களும் இடும் மதிபெண்கள் ,கண்டிஷன்கள் கேட்கவா வேணும்?
எடுத்துகாட்டுக்கு கலர்,கலராத்தான் பொண்ணு வேணும் ,மாடர்ன வேணும் ,ஸ்டைலா வேணும் கேட்பாங்க.ஆனா தான் எப்படி இருக்கோம் பார்க்க மாட்டாங்க.இதே மாதிரி பெண்களும் கணக்கு போட்டாங்கன்னா அப்புறம் திருமணம் என்கிற சொல்லை காகிதத்தில்தான் பார்க்கவேண்டும்.
கணவன் -மனைவி என்பது வண்டியும் அச்சானியும் போல்.இதில் ஒன்று சரியில்லைஎன்றாலும் வண்டி பயன்படாது.அது போல் தான் வாழ்க்கையும்.
மனம் ஒத்து வாழ்ந்தாலே; வண்ணம் தேவைபடாது அழகு தேவைபடாது.
கணவன் மனைவி உறவு பெரிதும் சரியில்லாமல் போவதற்கு காரணங்கள்
கணவன் தன்னை ஒரு பெரிய ஆளாக நினைத்துக்கொள்வது.மனைவின் எண்ணங்களை மதிக்காதது,தன்னை விட கீழே வைத்து பார்ப்பது.தன் பேச்சிற்கோ அல்லது எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்து அவர்களின் எண்ணங்களை குழி தோண்டி புதைப்பது.
மனனவி மட்டும் என்ன குறைச்சலா.கணவன் வாங்கிதரும் எந்த பொருளையும் வைத்து நிறைவு காணாதது.புரிந்துக்கொள்ளாமல் போவது.இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
கணவன் மனைவி எப்படி ஒத்துபோவது.
எந்த முடிவு எடுத்தாலும் இரண்டு பேர் சேர்ந்து எடுக்கவேண்டும்.
மனைவியை இழிவுபடுத்தி பேசுவது தவிர்க்க வேண்டும்
அவரவர் உணர்வுகளுக்கும் ,உரிமைக்கும் மரியாதை கொடுக்கவேண்டும்.
எது செய்யலாம் எது செய்யவேண்டாம் என்பது தெரிந்து நடந்தாலே அமைதியான சந்தோஷமான வாழ்க்கை வாழலாம்.

Wednesday, September 06, 2006

மாமியார்-மருமகள்

இந்த தலைப்பை பார்த்தால் வித்தியாசமாக தோன்றும்.இந்த உறவு எப்படிப்பட்ட உறவு என்பது யாராலும் உணர முடியாது.ஏன் என்னாலும் தான்.இன்றும் இந்த உறவு விசமமானது மற்றும் ஆபத்தானது என்று தான் அனைவரின் எண்ணத்திலும் உள்ளது.
ஆனால் இதை நல்ல முறையில் கையாண்டால் நம் புவியில் மண்ணெண்ணை, கேஸ் அடுப்பு இதெல்லாம் வெடிக்காது.
மருமகள் என்பவள் இன்னொரு மகள் என்பதை இன்னும் எந்த மாமியாரும் உணரவில்லை.மாமியார் இன்னொரு தாயாக இல்லாவிட்டாலும் குறைந்த பட்சத்தில் தாய் ஸ்தானத்தில் வைத்து பார்ப்பது கிடையாது.
எங்கேயாவது மாமியாரும் மருமளும் ஒற்றுமையாக உள்ளார்கள் என்று கேள்விபட்டதுண்டா?
எங்கு பார்த்தாலும் சண்டைகள்.இந்த சண்டையில் யார் தலை உருளும் தெரியுமா?அந்த வீட்டின் தலைவர் அதாவது மாமனார்,மற்றும் ஒரு நபர்.மிகவும் முக்கியமானவர்.அந்த மாமியாரின் மகன் மருமகளின் கணவர்.இவரின் நிலைமை மிகவும் மோசமாகத்தான் இருக்கும்.யார் பக்கம் பேசுவது என்பது தெரியாது.சில நேரத்தில் பச்சோந்தியாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது.
சின்ன சின்ன சண்டை போட்டாலும் மற்ற இடத்தில் இவர்கள் விட்டுகொடுக்கமாட்டார்கள்.(சில மாமியார்-மருமகள்).
இதை தீர்ப்பதற்கு எவ்வளவு பெரிய சீமான்கள் தலைவர்கள் வந்தாலும் தீராது.
ஆனால் என்னால் முடிந்தவரை சொல்லும் தீர்வு.
மாமியார்கள் தாங்கள் மருமகளாக இருந்த நாட்களை நினைத்து பார்க்கவேண்டும்.அது போல் மருமகள் தாங்கள் மாமியாராக போகும் காலத்தை நினைத்துப்பார்க்க வேண்டும். இது போல் நடந்தால் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை.

Monday, September 04, 2006

தாய்

தாய் இந்த வார்த்தையை பார்த்தாலோ கேட்டாலோ நம் உள்ளத்தில் ஒரு புது வகையான மாற்றம் நிகழும்.இது நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களோ இல்லையோ எனக்கு ஒரு மாற்றம் நிகழும்.தாய் என்பவள் கடவுளுக்கு முதற்படியாக உள்ளாள்.இது அனைவருக்கும் அறிந்தவையே.
தாய் ,நல்ல ஒரு தாய் கிடைப்பது அவரவர் செய்த புண்ணியமாக இருக்கும்.எதையும் எதிர்ப்பார்க்காமல் நமக்கு நல்லது செய்வது தாய் தான்.ஒரு உயிரை பெற்று அதை நல்லபடியாக வளர்த்து அதற்கு நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்து தருவது ஒரு தாயின் கடமை.
ஆனால் இந்த கடமையை தவறி நடப்பவர்களும் உள்ளனர்.அவர்களை பற்றி பேசவிரும்பவில்லை.
" தாயை போல் பிள்ளை;நூலை போல் சேலை"
அந்த காலத்தில் பெண் பார்க்கப்போகும் போது பெண்ணின் குணத்தை விட அந்த தாயின் குனதை வைத்து தான் முடிவு எடுப்பார்கள்.ஆனால் இப்பொழுது இது சாத்தியமா என்பது என்க்கு தெரியாது.
அன்பின் மறு வடிவம் தாய் என்றும் அறிவின் மறு வடிவம் தந்தை என்றும் சொல்வர்.எதை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கலாம்,ஆனால் தாயின் அன்பை மட்டும் எவராலும் விலைக்கு வாங்க முடியாது.
அந்த கால்த்தில் என்ன துன்பம் வந்தாலும் தன் பிள்ளை தன்னுடன் இருக்கவேண்டும் என்று வளர்ப்பாள்.ஆனால் இப்பொழுது பிள்ளைகளை சுமையாக நினைக்கும் சில தாயும் உள்ளனர்.
நீங்கள் நினைகளாம் தாயை புகழ்ந்துவிட்டு இப்பொழுது இப்படி எழுதுகிறேன் என்று.
சில தாய் என்ற பெயரில் பேய்களாக நடப்பவர்களும்,உள்ளனர்.குழந்தைகளை பெற்று அதை வளர்க்க போதிய வசதி இல்லாமல் அனாதை ஆசிரமத்தில் விடுவதும் ,குப்பைத்தொட்டிலில் போடுவதும் ,அரசுதோட்டிலில் போடுவதும்,பெண்ணாக பிறந்தால் சிசு கொலை செய்வதும் நம் நாட்டில் அதிகமாகி விட்டது.அரசு தொட்டில் வைத்ததும் வைத்தார்கள்,குழந்தைகள் பெறுகிவிட்டன.
அது மட்டுமா; குழந்தயை எங்கோ சென்று கரு உண்டாகி அதை கழிவறையில் பெத்து [போடுவதும் அதிகமாகி விட்டது.காக்கும் தாய் என்பவள் சென்று இப்பொழுது அழிக்கும் தாய் உருவாகி கொண்டிருக்கிறது.தாயை குற்றம் சாட்டி பேசுவாதாக யாரும் நினைக்கவேண்டாம்.
ஒரு பெண்ணை ஏன் இந்த நாடு மதிக்கிறது.அவள் ஒரு உயிரை ஈன்று தறுவதால்.அவளை கடவுளின் ஸ்தானத்திற்கு மேலாக தான் அனைவரும் வைத்துள்ளனர்.நம் நாட்டை கூட ஒரு பெண்ணிற்கு சமமாகத்தான் வைத்து புகழ்கின்றனர்.அப்படி உள்ளவள்,இந்த கொடுமையை செய்கிறாள் என்றால் நம்மால் பொறுக்க முடியாது.
நாகரீகம் வளர வளர நாடு போகும் நிலைமையைவிட தாய் என்ற சொல்லுக்கு என்ன கேடு வருமோ.ஆனால் நல்ல உள்ளம் படைத்த தாய்மார்களால் கொஞ்சம் காப்பாற்றபடும்.

Friday, September 01, 2006

தற்கொலை முயற்சி

மனிதன் வாழ்வில் மிகுதியாக வலம் வருவது கோபம் ஒன்று, மற்றொன்று தற்கொலை முயற்சி.இதை பற்றி ஏன் நான் பேச விரும்புகிறேன் என்றால்,மிகுதியாக கேள்விப்பட்டது என் வாழ்வில் இது தான்.
ஆகவே இதைப்பற்றி சில வார்த்தைகள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்.
மனிதன் எதில் முயற்சி செய்கிறானோ இல்லையோ ,எதில் தைரியம் வருகிறதோ இல்லையோ இந்த தற்கொலை முயர்சியில் மட்டும் விரைவாக தைரியம் வ்ருகிறது மற்றும் மிகுதியாக முயற்சி செய்கிறான்.இதில் எடுக்கும் முயற்சியை அவன் எதில் தோல்வி அடைந்தானோ அதில் எடுத்தால் வாழ்வில் வெற்றி பெறுவான்.மரணத்தை நம்பும் மனிதன் வாழும் வாழ்க்கையை நம்புவதில்லை.இது முட்டாள்தனமானது என்பது தெரிந்தும் இந்த தவறை செய்கிறான்.தற்கொலையில் மட்டும் நிம்மதியாகவா உயிரை விடுகிறார்கள்?.
அந்த நிமிடத்தில் தன்னை யாராவது காப்பாற்றுவார்களா என்று அந்த உயிர் தேடும்.நாம் செய்தது தவறு என்பது அப்பொழுது தான் தெரியும்.
கடவுள் தந்த உயிர் நமக்கு வாழ மட்டும் உரிமை உள்ளது,அதை அழிப்பதற்கோ அல்லது காயப்படுத்துவதற்கோ நமக்கு எந்த உரிமையும் இல்லை.
இது எனக்கு எப்படி தெரியும் என்றால் மற்றவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.
வாழ்வில் வரும் இன்னல்களை சமாளிக்கமுடியாமல் இந்த முடிவை மேற்கொள்கின்றனர்.
ஆகவே அனைவருக்கும் சொல்வது எது வ்ந்தலும் சமாளிப்பது நல்லது.மேலும் இந்த முடிவை பெரிதும் எடுப்பவர்கள் படித்தவர்களே.எனக்கு தெரிந்த தோழியின் தாயும் இந்த முடிவை மேற்கொண்டவர்களே.அவர்கள் அலறிய ஒலியை என் தோழி சொல்ல கேட்டிருக்கிறேன்.

Thursday, August 24, 2006

கோபம்

மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் என்று கேட்டால் அனைவரின் பதில் என்னவாக இருக்கும் தெரியுமா?அவரவர் வாழ்க்கையில் வந்துபோகும் மனிதர்களை பற்றிதான் சொல்வார்கள்.ஆனால் என்னுடைய பதில் என்ன தெரியுமா.கோபம்
இந்த கோபம் என்ற வார்த்தை மூன்று எழுத்தாகத் தான் தெரியும்.ஆனால் இதனால் எத்தனை மனிதர்கள் கொலைக்காரனாகவும்,மிருகங்களாகவும்,எதிரியாகவும் மாறியிருக்கார்கள்,தெரியுமா?
கோபம் வந்தால் நாம் என்ன செய்கிறோம் என்பது நமக்கே தெரியாது.ஆனால் இது தவறு.கோபம் நமக்கு அடிமையாக வேண்டுமே தவிர அதற்கு நாம் அடிமையாக கூடாது.கோபம் என்ர மிருகத்தை எப்படி நமக்குள் கொண்டுவருவது,என்பதை எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன்.
கோபம் வந்தால் நம் மனதிற்குள்ளே நாம் 1முதல் 10 வரை எண்ணிக்கொள்ளலாம்,அல்லது அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடலாம்,அல்லது தனியாக சென்று அவர்களை மனதிற்குள்ளோ,வெளிபடையாகவோ அவர்கள்ககதில் விழாமல் திட்டிக்கொள்ளளாம்.இதையும் நம் கோபம் தணியவில்லை என்றால் அவர்களின் புகைப்படத்தை நம் முன் வைத்துக்கொண்டு கையில் கிடைத்ததை வைத்து அடிக்கலாம் ,உதைக்கலாம்.
என்ன நான் சொன்னமாதிரி செய்துபாருங்கள் கண்டிப்பாக உங்களுக்குள்ளே ஒரு மாற்றம் தெரியும்.என் கோபத்திற்கு இதுதான் மருந்து.அதுபோல் உங்களுக்கும் இருக்கவேண்டும் என்று என்னுடைய அவா.

Wednesday, August 23, 2006

நினைத்து பார்க்கவில்லை

உன் கண்கள் என்னை பார்க்கும் பொழுதும்
உன் கைகள் என்னை தொடும் பொழுதும்
உன் இதழ்கள் என்னிடம் பேசும் பொழுதும்
உன் கால்கள் என் பின்னே
வரும் பொழுதும்
நீ சுவாசிக்கும் காற்றை நான் சுவாசிக்கும் பொழுதும்
நான் உனக்காக பிறந்தவள் உனக்காக
என்னை இறைவன் படைத்தான் என்று
நினைத்தேன்
ஆனால்
வேறு பெண்ணுக்காக என்னை தூது
அனுப்ப இந்த செய்கைகள் என்பதை
நினைத்து பார்க்கவில்லை.

பெண்ணே

வறுமையை கொடுமையாக நினைத்து
நீ ஏன் வரதட்சணையை மட்டும்
கொடுமையாக நினைக்கவில்லை
வாழ்க்கை மட்டும் போதும் என்று
நினைத்துவிட்டாயா?

அழகை சொல்வாயாக

வானத்தில் பறந்து செல்லும் பறவைகளே
வானத்தின் அழகை சொல்வாயாக
பூமியில் ஊர்ந்து செல்லும் அஃறிணைகளே
பூமியின் வளத்தை சொல்வயாக
மலையில் இருந்து பாய்ந்து வரும்
தண்ணீரே அதன் செழிப்பை சொல்வயாக
வாழ்க்கையை வாழ்ந்து வரும் மனிதனே
வாழ்வின் நெறிகளை சொல்வாயாக.

Tuesday, August 22, 2006

நரபலி

ஒரு மரம் எதீர்பாத்தது தனக்கு மனிதன் நீர் ஊற்றூவான் என்று
ஒரு காகம் எதிர்பார்க்கும் தனக்கு உணவு வரும் என்று
ஒரு உழவன் எதிர்பார்ப்பான் இன்று மழை வரும் என்று
ஆனால்
எதையும் எதிர்பார்க்காமல் பிறக்கும் குழந்தைக்கு
மனிதன் வைத்திருப்பது நரபலி ஒன்று
இது
பக்தியின் சீற்றத்தால் அல்ல
வெறியின் சீற்றத்தால்.

சாதனை

சோதனையை வேதனையாக
தாங்கும் மனிதனே
சோதனையை சாதனையாக தாங்கு
ஏனென்றால் உலகம் உன் கையில்.

Thursday, August 10, 2006

பெண்களே

பெண்களே
தங்கத்தை காதிற்கு பூட்டியும்
வெள்ளியை காலிற்கு பூட்டியும்
வைத்த நீங்கள்
பேராசையை மட்டும் ஏன் பூட்ட
மறந்துவிட்டீர்கள்?

Sunday, August 06, 2006

திரியில்லாமல் தீபம் எரிவதில்லை
உணவில்லாமல் விலங்குகள் வாழ்வதில்லை
மணமில்லாமல் மலர்கள் பூப்பதில்லை
இடியில்லாமல் மழை வருவதில்லை
காற்றில்லாமல் சுவாசிக்க முடிவதில்லை
அதுபோல்
நீயில்லாமல் நான் இருப்பதில்லை

Friday, August 04, 2006

ஹைக்கூ

கலங்கிய
நெஞ்சத்திற்கு
அமுத
விஷமாய் இருந்தது
குடி
************
தெளிந்த
நீரோடையாய்
வாழ்ந்த பெண்ணுக்கு
புயல் வந்து வீசியது
வரதட்சணை கொடுமை

பெண்ணே நீ போராடு

பெண்ணே

நீ போராடுவது பிடித்திருக்கிறது

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு

என்று கூறிய சொல்லை

பொய்ப்பித்தது பிடித்திருக்கிறது

உன்னை விலை பேசி வரதட்சணை

என்னும் கொடுமையால் விற்ற ராட்சசர்களை

காலால் எட்டி உதைத்தது பிடித்திருக்கிறது

துன்பம் வந்த போதும் துவளாமல்

அதை எதிர்த்து போராடியது பிடித்திருக்கிறது

இன்னும் போராடிக் கொண்டிருப்பது பிடித்திருக்கிறது

நீ இருந்தால்

நீ ரோஜாவாக இருந்தால் - அதன்
முள்ளாய் நான் இருப்பேன்
நீ மல்லியாக இருந்தால் - அதன்
மணமாய் நான் இருப்பேன்
நீ தாமரையாக இருந்தால் - அதனை
தாங்கிக் கொள்ளும் இலையாய் இருப்பேன்
நீ அல்லியாக இருந்தால் - அதன்
இதழாய் நான் இருப்பேன்

என்னவனே
நீ எதுவாக இருந்தாலும் உன்னுடன் என்றும்
நான் இருப்பேன்