Thursday, August 24, 2006

கோபம்

மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் என்று கேட்டால் அனைவரின் பதில் என்னவாக இருக்கும் தெரியுமா?அவரவர் வாழ்க்கையில் வந்துபோகும் மனிதர்களை பற்றிதான் சொல்வார்கள்.ஆனால் என்னுடைய பதில் என்ன தெரியுமா.கோபம்
இந்த கோபம் என்ற வார்த்தை மூன்று எழுத்தாகத் தான் தெரியும்.ஆனால் இதனால் எத்தனை மனிதர்கள் கொலைக்காரனாகவும்,மிருகங்களாகவும்,எதிரியாகவும் மாறியிருக்கார்கள்,தெரியுமா?
கோபம் வந்தால் நாம் என்ன செய்கிறோம் என்பது நமக்கே தெரியாது.ஆனால் இது தவறு.கோபம் நமக்கு அடிமையாக வேண்டுமே தவிர அதற்கு நாம் அடிமையாக கூடாது.கோபம் என்ர மிருகத்தை எப்படி நமக்குள் கொண்டுவருவது,என்பதை எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன்.
கோபம் வந்தால் நம் மனதிற்குள்ளே நாம் 1முதல் 10 வரை எண்ணிக்கொள்ளலாம்,அல்லது அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடலாம்,அல்லது தனியாக சென்று அவர்களை மனதிற்குள்ளோ,வெளிபடையாகவோ அவர்கள்ககதில் விழாமல் திட்டிக்கொள்ளளாம்.இதையும் நம் கோபம் தணியவில்லை என்றால் அவர்களின் புகைப்படத்தை நம் முன் வைத்துக்கொண்டு கையில் கிடைத்ததை வைத்து அடிக்கலாம் ,உதைக்கலாம்.
என்ன நான் சொன்னமாதிரி செய்துபாருங்கள் கண்டிப்பாக உங்களுக்குள்ளே ஒரு மாற்றம் தெரியும்.என் கோபத்திற்கு இதுதான் மருந்து.அதுபோல் உங்களுக்கும் இருக்கவேண்டும் என்று என்னுடைய அவா.

2 comments:

Anonymous said...

Thappa nenechikaheenga, ungaloda photo iruntha onnu kodungalen.

வேந்தன் said...

//Thappa nenechikaheenga, ungaloda photo iruntha onnu kodungalen. //
அவங்களுக்கு கோபம் வராதுங்கிற தைரியமா! :)))))