Monday, September 11, 2006

கணவன் -மனைவி

என்ன உறவையே வைத்து எழுதுகிறேனே என்று நினைக்கவேண்டாம்.இப்ப உள்ள கலி காலத்தில் இந்த உறவுக்கு மதிப்பு என்பது குறைந்து கொண்டே வருகிறது.
எல்லா உறவை விட இந்த உறவு மிகவும் முக்கியமானது மற்றும் வலிமையானதும் கூட.ஏனென்றால் இந்த உறவு எந்த இரத்த பந்தமும் இல்லாமல் நம்பிக்கையில் உண்டாவது.இதை புரிந்து கொண்டு வாழ்பவரும் உண்டு, புரியாமல் பிரிந்தவரும் உண்டு.
''கணவனே கண் கண்ட தெய்வம்'' மற்றும் ''கல்லானாலும் கணவன் ;புல்லானாலும் புருசன்'' என்று சொல்வர்.ஆனால் இப்பொழுது இது எல்லாம் கணவில் தான் காண முடிகிறது.
திருமண வாழ்கை என்பது இரு மணமும் இணைவது.அந்த காலத்தில் என்ன நேர்ந்தாலும் கணவனையே கடைசி வரை என்று நினனத்தனர்.இப்ப கணவனின் நடவடிக்கை பிடிக்கவில்லையா அல்லது தனக்கு ஒத்து வரவில்லையா உடனே விவாகரத்து.
குடிக்கும் புருசனை விரும்பாத பெண்கள் இப்பொழுது குடிக்க தெரியுமா ஸ்டைலா இருக்கதெரியுமாஎன்ற முழு விவரம் தெரிந்துதான் கல்யாணம் செய்கின்றனர்.ஆண்கள் மட்டும் என்ன குறைந்தவர்களா என்ன?அவர்களும் இடும் மதிபெண்கள் ,கண்டிஷன்கள் கேட்கவா வேணும்?
எடுத்துகாட்டுக்கு கலர்,கலராத்தான் பொண்ணு வேணும் ,மாடர்ன வேணும் ,ஸ்டைலா வேணும் கேட்பாங்க.ஆனா தான் எப்படி இருக்கோம் பார்க்க மாட்டாங்க.இதே மாதிரி பெண்களும் கணக்கு போட்டாங்கன்னா அப்புறம் திருமணம் என்கிற சொல்லை காகிதத்தில்தான் பார்க்கவேண்டும்.
கணவன் -மனைவி என்பது வண்டியும் அச்சானியும் போல்.இதில் ஒன்று சரியில்லைஎன்றாலும் வண்டி பயன்படாது.அது போல் தான் வாழ்க்கையும்.
மனம் ஒத்து வாழ்ந்தாலே; வண்ணம் தேவைபடாது அழகு தேவைபடாது.
கணவன் மனைவி உறவு பெரிதும் சரியில்லாமல் போவதற்கு காரணங்கள்
கணவன் தன்னை ஒரு பெரிய ஆளாக நினைத்துக்கொள்வது.மனைவின் எண்ணங்களை மதிக்காதது,தன்னை விட கீழே வைத்து பார்ப்பது.தன் பேச்சிற்கோ அல்லது எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்து அவர்களின் எண்ணங்களை குழி தோண்டி புதைப்பது.
மனனவி மட்டும் என்ன குறைச்சலா.கணவன் வாங்கிதரும் எந்த பொருளையும் வைத்து நிறைவு காணாதது.புரிந்துக்கொள்ளாமல் போவது.இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
கணவன் மனைவி எப்படி ஒத்துபோவது.
எந்த முடிவு எடுத்தாலும் இரண்டு பேர் சேர்ந்து எடுக்கவேண்டும்.
மனைவியை இழிவுபடுத்தி பேசுவது தவிர்க்க வேண்டும்
அவரவர் உணர்வுகளுக்கும் ,உரிமைக்கும் மரியாதை கொடுக்கவேண்டும்.
எது செய்யலாம் எது செய்யவேண்டாம் என்பது தெரிந்து நடந்தாலே அமைதியான சந்தோஷமான வாழ்க்கை வாழலாம்.

Wednesday, September 06, 2006

மாமியார்-மருமகள்

இந்த தலைப்பை பார்த்தால் வித்தியாசமாக தோன்றும்.இந்த உறவு எப்படிப்பட்ட உறவு என்பது யாராலும் உணர முடியாது.ஏன் என்னாலும் தான்.இன்றும் இந்த உறவு விசமமானது மற்றும் ஆபத்தானது என்று தான் அனைவரின் எண்ணத்திலும் உள்ளது.
ஆனால் இதை நல்ல முறையில் கையாண்டால் நம் புவியில் மண்ணெண்ணை, கேஸ் அடுப்பு இதெல்லாம் வெடிக்காது.
மருமகள் என்பவள் இன்னொரு மகள் என்பதை இன்னும் எந்த மாமியாரும் உணரவில்லை.மாமியார் இன்னொரு தாயாக இல்லாவிட்டாலும் குறைந்த பட்சத்தில் தாய் ஸ்தானத்தில் வைத்து பார்ப்பது கிடையாது.
எங்கேயாவது மாமியாரும் மருமளும் ஒற்றுமையாக உள்ளார்கள் என்று கேள்விபட்டதுண்டா?
எங்கு பார்த்தாலும் சண்டைகள்.இந்த சண்டையில் யார் தலை உருளும் தெரியுமா?அந்த வீட்டின் தலைவர் அதாவது மாமனார்,மற்றும் ஒரு நபர்.மிகவும் முக்கியமானவர்.அந்த மாமியாரின் மகன் மருமகளின் கணவர்.இவரின் நிலைமை மிகவும் மோசமாகத்தான் இருக்கும்.யார் பக்கம் பேசுவது என்பது தெரியாது.சில நேரத்தில் பச்சோந்தியாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது.
சின்ன சின்ன சண்டை போட்டாலும் மற்ற இடத்தில் இவர்கள் விட்டுகொடுக்கமாட்டார்கள்.(சில மாமியார்-மருமகள்).
இதை தீர்ப்பதற்கு எவ்வளவு பெரிய சீமான்கள் தலைவர்கள் வந்தாலும் தீராது.
ஆனால் என்னால் முடிந்தவரை சொல்லும் தீர்வு.
மாமியார்கள் தாங்கள் மருமகளாக இருந்த நாட்களை நினைத்து பார்க்கவேண்டும்.அது போல் மருமகள் தாங்கள் மாமியாராக போகும் காலத்தை நினைத்துப்பார்க்க வேண்டும். இது போல் நடந்தால் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை.

Monday, September 04, 2006

தாய்

தாய் இந்த வார்த்தையை பார்த்தாலோ கேட்டாலோ நம் உள்ளத்தில் ஒரு புது வகையான மாற்றம் நிகழும்.இது நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களோ இல்லையோ எனக்கு ஒரு மாற்றம் நிகழும்.தாய் என்பவள் கடவுளுக்கு முதற்படியாக உள்ளாள்.இது அனைவருக்கும் அறிந்தவையே.
தாய் ,நல்ல ஒரு தாய் கிடைப்பது அவரவர் செய்த புண்ணியமாக இருக்கும்.எதையும் எதிர்ப்பார்க்காமல் நமக்கு நல்லது செய்வது தாய் தான்.ஒரு உயிரை பெற்று அதை நல்லபடியாக வளர்த்து அதற்கு நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்து தருவது ஒரு தாயின் கடமை.
ஆனால் இந்த கடமையை தவறி நடப்பவர்களும் உள்ளனர்.அவர்களை பற்றி பேசவிரும்பவில்லை.
" தாயை போல் பிள்ளை;நூலை போல் சேலை"
அந்த காலத்தில் பெண் பார்க்கப்போகும் போது பெண்ணின் குணத்தை விட அந்த தாயின் குனதை வைத்து தான் முடிவு எடுப்பார்கள்.ஆனால் இப்பொழுது இது சாத்தியமா என்பது என்க்கு தெரியாது.
அன்பின் மறு வடிவம் தாய் என்றும் அறிவின் மறு வடிவம் தந்தை என்றும் சொல்வர்.எதை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கலாம்,ஆனால் தாயின் அன்பை மட்டும் எவராலும் விலைக்கு வாங்க முடியாது.
அந்த கால்த்தில் என்ன துன்பம் வந்தாலும் தன் பிள்ளை தன்னுடன் இருக்கவேண்டும் என்று வளர்ப்பாள்.ஆனால் இப்பொழுது பிள்ளைகளை சுமையாக நினைக்கும் சில தாயும் உள்ளனர்.
நீங்கள் நினைகளாம் தாயை புகழ்ந்துவிட்டு இப்பொழுது இப்படி எழுதுகிறேன் என்று.
சில தாய் என்ற பெயரில் பேய்களாக நடப்பவர்களும்,உள்ளனர்.குழந்தைகளை பெற்று அதை வளர்க்க போதிய வசதி இல்லாமல் அனாதை ஆசிரமத்தில் விடுவதும் ,குப்பைத்தொட்டிலில் போடுவதும் ,அரசுதோட்டிலில் போடுவதும்,பெண்ணாக பிறந்தால் சிசு கொலை செய்வதும் நம் நாட்டில் அதிகமாகி விட்டது.அரசு தொட்டில் வைத்ததும் வைத்தார்கள்,குழந்தைகள் பெறுகிவிட்டன.
அது மட்டுமா; குழந்தயை எங்கோ சென்று கரு உண்டாகி அதை கழிவறையில் பெத்து [போடுவதும் அதிகமாகி விட்டது.காக்கும் தாய் என்பவள் சென்று இப்பொழுது அழிக்கும் தாய் உருவாகி கொண்டிருக்கிறது.தாயை குற்றம் சாட்டி பேசுவாதாக யாரும் நினைக்கவேண்டாம்.
ஒரு பெண்ணை ஏன் இந்த நாடு மதிக்கிறது.அவள் ஒரு உயிரை ஈன்று தறுவதால்.அவளை கடவுளின் ஸ்தானத்திற்கு மேலாக தான் அனைவரும் வைத்துள்ளனர்.நம் நாட்டை கூட ஒரு பெண்ணிற்கு சமமாகத்தான் வைத்து புகழ்கின்றனர்.அப்படி உள்ளவள்,இந்த கொடுமையை செய்கிறாள் என்றால் நம்மால் பொறுக்க முடியாது.
நாகரீகம் வளர வளர நாடு போகும் நிலைமையைவிட தாய் என்ற சொல்லுக்கு என்ன கேடு வருமோ.ஆனால் நல்ல உள்ளம் படைத்த தாய்மார்களால் கொஞ்சம் காப்பாற்றபடும்.

Friday, September 01, 2006

தற்கொலை முயற்சி

மனிதன் வாழ்வில் மிகுதியாக வலம் வருவது கோபம் ஒன்று, மற்றொன்று தற்கொலை முயற்சி.இதை பற்றி ஏன் நான் பேச விரும்புகிறேன் என்றால்,மிகுதியாக கேள்விப்பட்டது என் வாழ்வில் இது தான்.
ஆகவே இதைப்பற்றி சில வார்த்தைகள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்.
மனிதன் எதில் முயற்சி செய்கிறானோ இல்லையோ ,எதில் தைரியம் வருகிறதோ இல்லையோ இந்த தற்கொலை முயர்சியில் மட்டும் விரைவாக தைரியம் வ்ருகிறது மற்றும் மிகுதியாக முயற்சி செய்கிறான்.இதில் எடுக்கும் முயற்சியை அவன் எதில் தோல்வி அடைந்தானோ அதில் எடுத்தால் வாழ்வில் வெற்றி பெறுவான்.மரணத்தை நம்பும் மனிதன் வாழும் வாழ்க்கையை நம்புவதில்லை.இது முட்டாள்தனமானது என்பது தெரிந்தும் இந்த தவறை செய்கிறான்.தற்கொலையில் மட்டும் நிம்மதியாகவா உயிரை விடுகிறார்கள்?.
அந்த நிமிடத்தில் தன்னை யாராவது காப்பாற்றுவார்களா என்று அந்த உயிர் தேடும்.நாம் செய்தது தவறு என்பது அப்பொழுது தான் தெரியும்.
கடவுள் தந்த உயிர் நமக்கு வாழ மட்டும் உரிமை உள்ளது,அதை அழிப்பதற்கோ அல்லது காயப்படுத்துவதற்கோ நமக்கு எந்த உரிமையும் இல்லை.
இது எனக்கு எப்படி தெரியும் என்றால் மற்றவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.
வாழ்வில் வரும் இன்னல்களை சமாளிக்கமுடியாமல் இந்த முடிவை மேற்கொள்கின்றனர்.
ஆகவே அனைவருக்கும் சொல்வது எது வ்ந்தலும் சமாளிப்பது நல்லது.மேலும் இந்த முடிவை பெரிதும் எடுப்பவர்கள் படித்தவர்களே.எனக்கு தெரிந்த தோழியின் தாயும் இந்த முடிவை மேற்கொண்டவர்களே.அவர்கள் அலறிய ஒலியை என் தோழி சொல்ல கேட்டிருக்கிறேன்.