உன் கண்கள் என்னை பார்க்கும் பொழுதும்
உன் கைகள் என்னை தொடும் பொழுதும்
உன் இதழ்கள் என்னிடம் பேசும் பொழுதும்
உன் கால்கள் என் பின்னே
வரும் பொழுதும்
நீ சுவாசிக்கும் காற்றை நான் சுவாசிக்கும் பொழுதும்
நான் உனக்காக பிறந்தவள் உனக்காக
என்னை இறைவன் படைத்தான் என்று
நினைத்தேன்
ஆனால்
வேறு பெண்ணுக்காக என்னை தூது
அனுப்ப இந்த செய்கைகள் என்பதை
நினைத்து பார்க்கவில்லை.
Wednesday, August 23, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment