அவசர வாழ்க்கை ,இதை பற்றி சொல்லணும் என்றால் எல்லாருமே எல்லாத்துலயும் அவசரம்
இந்த அவசரம் என்ற பேய் பல பாதிப்புகளை அளிக்கிறது. நான் ஏன் "பேய்" சொன்னேன் என்றால் இது நம்மள விட்டு போகாம நம் பின்னாடியே அல்லது கூடவே இருக்கும் வேலை எளிதில் முடிப்பதற்கு எத்தனை இயந்திரகள் வந்தாலும் அவசரம் என்பது இருந்துகொண்டே தான் இருக்கும் காலை விடிந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை அவசரம் இருந்துக்கொண்டேதான் இருக்கிறது.
இந்த அவசரத்தினால் பல பாதிப்புகள் ,மறதி, இழப்பு, ஏமாற்றம், இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்
நாம் இதனால் என்ன சாதிக்குறோம் இந்த அவசரத்தினால் நமக்கிருக்கும் ஒரு வாழ்க்கையை நம்மால் மகிழ்ந்திட முடியவில்லை। இதனால் வாழ்க்கை அவசரமாக தள்ளப்படுகிறது எதற்கும் மதிப்பு இல்லாமல் போகிறது. அழகான செம்மையான வானம் , தண்ணீர் ஓடையின் சத்தம் அல்லது அழகான பூக்கள் அல்லது இசை. இப்படி எதையும் அனுபவித்து ரசிக்க முடியாமல் போகிறது.
அவசர ஓட்டம் நம் வாழ்க்கையை அவசரமாக தள்ளுகிறது. இதை நாம் எப்பொழுது உணரப்போகிரோம்.