Wednesday, April 22, 2020

கொரோனா.......

"கொரோனா "இந்த வார்த்தை யாரு கேட்டாலும் நம்மால் மறக்க முடியாது. எத்தனை வருடங்களானாலும் இந்த வார்த்தை கேட்டவுடன் நமக்கு ஏற்பட்ட பாதிப்புகள் நினைவுவரும். பாதிப்பு என்றால் அதில் நல்லதும் இருக்கு , சொல்ல போன நல்ல பாதிப்புப்புகள் தான். இந்த வைரஸ் ஒரு சில நாளில் அனைவரின் வாழ்க்கையை, தவறு.. அவசர வாழ்ககையை சற்று பாஸ் பட்டன் செய்துள்ளது. நம் எல்லாரையும் ஒரு நிமிடம் நம் கோபங்கள் , சண்டைகள், வேலைகள் இப்படி பல விஷயங்களை சற்று ஓரமாக ஒதுக்கிவைத்துள்ளது. எல்லார் மனதிலும் இந்த கொரோன என்ற பயங்கரம் தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது. நாம் இப்பொழுது மூன்றாவது வாரம் "ஸ்டே அட் ஹோம்" போய்க்கொண்டிருக்கிரோம். சரி நாம் இப்படி வீட்டில் இருந்து என்ன சாதிச்சோம் அப்படினு பார்த்தீங்கன்னா , பேமிலி டைம் நிறைய கிடைத்திருக்கு , உறவினர்களுடன், பெற்றோர்களுடன் , நண்பருக்களுடன் பேசுவதற்கு நல்ல ஒரு தருணம் என்றே சொல்லலாம். யாருகிட்டேயும் கொஞ்சம் பிசினு சொன்னது போய் இப்போ இந்த நிமிடத்தை உபயோகித்துக்கொள்கிறோம். வாய்க்கு ருசியா சமைத்து சாப்பிடுறோம் , நிறைய படங்கள் பேமிலியோட  பார்க்கிரோம். இதெல்லாம் நல்ல பாதிப்புகள் , சந்தோசமான தருணங்கள். ஆனா என் கண்ணோட்டத்தில் தெரியும் சில விஷயங்கள் இந்த கொரோன பாதிப்பு முடிந்தவுடன் இயல்பு வாழ்க்கைக்கு போன உடன் நடக்கும் பாதிப்புப்புகள், நாம் எல்லாரும் இயல்பாக இருப்போமா , அப்படி ஒரு கேள்வி எனக்குள் இருக்கு. என்னதான் இந்த கொரோன போனாலும் மனிதனின் மனதில் இருந்து போறதுக்கு எததனை நாள் எடுக்கும் என்று யாருக்கும் தெரியாது."சோசியல் டிஸ்டன்சிங்"எந்த அளவுக்கு மனதில் ஆழமாக துளை போட்டு உட்கார்ந்துஇருக்கிறது என்பது, நாம் அறிவோம். இயல்பாக பழகுவோமா? பயம் இல்லாமல் வெளியில் செல்வோமா?இப்படி நிறைய கேள்வி எனக்குள். அவசர வாழ்க்கையில் இருக்கும் பொழுது , நாம் எத்தனை பேரை பார்த்து சிரித்திருப்போம், இல்லை பேசிருப்போம் , இப்போ இந்த "சோசியல் டிஸ்டன்ஸ்" எந்த அளவுக்கு விரிசல் தந்துள்ளது என்பது தெரியவில்லை.இனிமேல்  ஒரு தும்மல் , இருமல் , காய்சசல் , எப்படி மனிதனின் பார்வையில் தெரியப்போகிறது என்பது நினைத்தால் கொஞ்சம் யோசனையாகத்தான் உள்ளது. நேரில் பார்த்தால் புன்முறுவல் செய்வார்களா இல்லை இதே ஆறடி தூரம் தள்ளி செல்வார்களா? இனிமேல் ஒரு கெட்டு -கெதர் இல்லை ஒரு பார்ட்டி இயல்பாக நடக்குமா இப்படி பல கேள்விகள். குழந்தைகளின் மனதில் எந்த அளவு பாதிப்பு இருக்கும். பள்ளிகளுக்கு செல்லும் போது ஏற்படும் மாற்றங்கள், அச்சங்கள்  ஒரு கேள்விக்குறிதான். இயல்பான வாழ்க்கைக்கு அவர்களும் திரும்புவார்களா?
முகமூடியுடன் அலைகிறார்கள் என்று போய் இன்று அனைவரும் முகமூடியுடன் அலையும் நிலைமை வந்துள்ளது. மனிதனுக்கு மனிதன் ஆறடி தூரம் போகும் நிலைமை , வாகனத்திற்கும்  வந்துவிட்டது. இந்த 2020 வருடம் நிஜமாகவே இந்த உலகத்துக்கு நிறைய சொல்லிவிட்டது, சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது , எது தேவை எது தேவையில்லை, ஒரு மனிதனின் வாழ்க்கையில் என்ன துளைத்து கொண்டிருக்கோம் , என்ன இழந்துகொண்டிருக்கோம்.... இப்படி சொல்லிக்கொண்டேபோகலாம்....  
இந்த நிலை மாறும்  ஆனால் சற்று தாமதமாகும் , அவ்வளவுதான் :) 
நல்லதை எதிர்பார்த்து இந்த "லோக்கடவுன்/ஸ்டே அட் ஹோம்"அனைவரும்  ஒன்றாக சேர்ந்து செயல்படுவோம் , வெல்வோம்....