Monday, September 04, 2006

தாய்

தாய் இந்த வார்த்தையை பார்த்தாலோ கேட்டாலோ நம் உள்ளத்தில் ஒரு புது வகையான மாற்றம் நிகழும்.இது நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களோ இல்லையோ எனக்கு ஒரு மாற்றம் நிகழும்.தாய் என்பவள் கடவுளுக்கு முதற்படியாக உள்ளாள்.இது அனைவருக்கும் அறிந்தவையே.
தாய் ,நல்ல ஒரு தாய் கிடைப்பது அவரவர் செய்த புண்ணியமாக இருக்கும்.எதையும் எதிர்ப்பார்க்காமல் நமக்கு நல்லது செய்வது தாய் தான்.ஒரு உயிரை பெற்று அதை நல்லபடியாக வளர்த்து அதற்கு நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்து தருவது ஒரு தாயின் கடமை.
ஆனால் இந்த கடமையை தவறி நடப்பவர்களும் உள்ளனர்.அவர்களை பற்றி பேசவிரும்பவில்லை.
" தாயை போல் பிள்ளை;நூலை போல் சேலை"
அந்த காலத்தில் பெண் பார்க்கப்போகும் போது பெண்ணின் குணத்தை விட அந்த தாயின் குனதை வைத்து தான் முடிவு எடுப்பார்கள்.ஆனால் இப்பொழுது இது சாத்தியமா என்பது என்க்கு தெரியாது.
அன்பின் மறு வடிவம் தாய் என்றும் அறிவின் மறு வடிவம் தந்தை என்றும் சொல்வர்.எதை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கலாம்,ஆனால் தாயின் அன்பை மட்டும் எவராலும் விலைக்கு வாங்க முடியாது.
அந்த கால்த்தில் என்ன துன்பம் வந்தாலும் தன் பிள்ளை தன்னுடன் இருக்கவேண்டும் என்று வளர்ப்பாள்.ஆனால் இப்பொழுது பிள்ளைகளை சுமையாக நினைக்கும் சில தாயும் உள்ளனர்.
நீங்கள் நினைகளாம் தாயை புகழ்ந்துவிட்டு இப்பொழுது இப்படி எழுதுகிறேன் என்று.
சில தாய் என்ற பெயரில் பேய்களாக நடப்பவர்களும்,உள்ளனர்.குழந்தைகளை பெற்று அதை வளர்க்க போதிய வசதி இல்லாமல் அனாதை ஆசிரமத்தில் விடுவதும் ,குப்பைத்தொட்டிலில் போடுவதும் ,அரசுதோட்டிலில் போடுவதும்,பெண்ணாக பிறந்தால் சிசு கொலை செய்வதும் நம் நாட்டில் அதிகமாகி விட்டது.அரசு தொட்டில் வைத்ததும் வைத்தார்கள்,குழந்தைகள் பெறுகிவிட்டன.
அது மட்டுமா; குழந்தயை எங்கோ சென்று கரு உண்டாகி அதை கழிவறையில் பெத்து [போடுவதும் அதிகமாகி விட்டது.காக்கும் தாய் என்பவள் சென்று இப்பொழுது அழிக்கும் தாய் உருவாகி கொண்டிருக்கிறது.தாயை குற்றம் சாட்டி பேசுவாதாக யாரும் நினைக்கவேண்டாம்.
ஒரு பெண்ணை ஏன் இந்த நாடு மதிக்கிறது.அவள் ஒரு உயிரை ஈன்று தறுவதால்.அவளை கடவுளின் ஸ்தானத்திற்கு மேலாக தான் அனைவரும் வைத்துள்ளனர்.நம் நாட்டை கூட ஒரு பெண்ணிற்கு சமமாகத்தான் வைத்து புகழ்கின்றனர்.அப்படி உள்ளவள்,இந்த கொடுமையை செய்கிறாள் என்றால் நம்மால் பொறுக்க முடியாது.
நாகரீகம் வளர வளர நாடு போகும் நிலைமையைவிட தாய் என்ற சொல்லுக்கு என்ன கேடு வருமோ.ஆனால் நல்ல உள்ளம் படைத்த தாய்மார்களால் கொஞ்சம் காப்பாற்றபடும்.

1 comment:

கார்த்திக் பிரபு said...

hi ungalukkum bharathi pidikkuma? ennakum than..en pakkthirku vandhu parunga