Friday, September 01, 2006

தற்கொலை முயற்சி

மனிதன் வாழ்வில் மிகுதியாக வலம் வருவது கோபம் ஒன்று, மற்றொன்று தற்கொலை முயற்சி.இதை பற்றி ஏன் நான் பேச விரும்புகிறேன் என்றால்,மிகுதியாக கேள்விப்பட்டது என் வாழ்வில் இது தான்.
ஆகவே இதைப்பற்றி சில வார்த்தைகள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்.
மனிதன் எதில் முயற்சி செய்கிறானோ இல்லையோ ,எதில் தைரியம் வருகிறதோ இல்லையோ இந்த தற்கொலை முயர்சியில் மட்டும் விரைவாக தைரியம் வ்ருகிறது மற்றும் மிகுதியாக முயற்சி செய்கிறான்.இதில் எடுக்கும் முயற்சியை அவன் எதில் தோல்வி அடைந்தானோ அதில் எடுத்தால் வாழ்வில் வெற்றி பெறுவான்.மரணத்தை நம்பும் மனிதன் வாழும் வாழ்க்கையை நம்புவதில்லை.இது முட்டாள்தனமானது என்பது தெரிந்தும் இந்த தவறை செய்கிறான்.தற்கொலையில் மட்டும் நிம்மதியாகவா உயிரை விடுகிறார்கள்?.
அந்த நிமிடத்தில் தன்னை யாராவது காப்பாற்றுவார்களா என்று அந்த உயிர் தேடும்.நாம் செய்தது தவறு என்பது அப்பொழுது தான் தெரியும்.
கடவுள் தந்த உயிர் நமக்கு வாழ மட்டும் உரிமை உள்ளது,அதை அழிப்பதற்கோ அல்லது காயப்படுத்துவதற்கோ நமக்கு எந்த உரிமையும் இல்லை.
இது எனக்கு எப்படி தெரியும் என்றால் மற்றவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.
வாழ்வில் வரும் இன்னல்களை சமாளிக்கமுடியாமல் இந்த முடிவை மேற்கொள்கின்றனர்.
ஆகவே அனைவருக்கும் சொல்வது எது வ்ந்தலும் சமாளிப்பது நல்லது.மேலும் இந்த முடிவை பெரிதும் எடுப்பவர்கள் படித்தவர்களே.எனக்கு தெரிந்த தோழியின் தாயும் இந்த முடிவை மேற்கொண்டவர்களே.அவர்கள் அலறிய ஒலியை என் தோழி சொல்ல கேட்டிருக்கிறேன்.

4 comments:

வேந்தன் said...

good one, i am expecting more from you like that articles

Anonymous said...

Pls send kavithai to my mag. ANI
anikavi@gmail.com

அழகான ராட்சசி said...

உங்கள் எதிர்பார்ப்புக்கு நன்றி.மேலும் எழுத முயற்சிக்கு நன்றி.வேந்தன்

அழகான ராட்சசி said...

என்னுடைய கவிதையை ரசித்ததற்கு மிகவும் நன்றி.உங்கள் முகவரிக்கு கவிதையை அனுப்ப முயற்சிக்கிறேன்.