Sunday, October 08, 2006

குழந்தைகள் வளர்ப்பு

குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் சந்தோஷம் தான் வரும்.அவர்கள் செய்யும் சின்ன சேட்டைகள் கூட சந்தோஷத்தை கொடுக்கும்.அந்த காலத்தில் குழந்தைகளை பெத்தோமா அவர்களை வள்ர்த்தோமா நல்ல ஒரு வாழ்க்கை அமைத்துக்கொடுத்தோமா என்று நினைப்பர்.ஆனால் இப்பொழுது ஒரு குழந்தை இருந்தாலும் அதற்கு தெரியாதது ஒன்றும் இருக்ககூடாது என்று நினைக்கின்றனர்.முன்னுள்ள காலத்தில் பிள்ளைகளை படிக்க வைக்கிறோமோ இல்லையோ அவர்களுக்கு நிறைய சம்பாதித்து சொத்துக்கள் நிறைய வவத்து விட்டு போய்விடுவார்கள்.அதற்கு சண்டை போட்டுக்கொண்டு கூடபிறந்த எண்ணம் கூட இல்லாமல் உறவு முரிந்துவிடும்.
ஆனால் இப்பொழுது ஒன்றோ இரண்டோ மூன்றோ இருந்தாலும் அதற்கு சேர்த்து வைக்கிறார்களோ இல்லையோ அவர்களுக்கு எல்லாவிதமான கலைகளை கத்துக்கொடுத்துவிடுகின்றனர்.அதனால் பெற்றோர்களை எதிர்பார்ப்பதை குறைத்துகொள்கின்றனர்.இதானால் காலாகாலதிற்கு சொந்தங்கள் நிலைத்திற்கும்.
சரி இப்பொழுது குழந்தைகள் வளர்ப்பு பற்றி பார்ப்போம்.
உணவு முறை;யாரை கேட்டாலும் என்பிள்ளை சாப்பிடமாட்டேங்கிறா.இது அனைவருக்கும் நடக்கும் பிரச்சினை.இதற்கு எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.இப்பசொல்லபோறது சில பேருக்கு தெரிந்திருக்கலாம் தெரியாமலும் இருக்கலாம்.தெரியாமல் இருந்தால் தெரிந்துக்கொள்ளுங்கள்.தெரிந்திருந்தால் எனக்கு சொல்லுங்கள். முதலில் சாப்பாட்டில் வற்புறுத்துவது நல்லதல்ல.அவர்கலின் எண்ணம் வாக்கில் விடவெண்டும் என்று சொல்வர்.ஆனால் நான் சொல்வது எதையும் வித்தியாசமாக செய்து கொடுங்கள்.குழந்தைகள் விரும்புவர்... . .உடைகளில் வண்ணத்தை தேர்ந்தெடுத்து கொடுப்பது போல் உணவிலும் வண்ணம் சேருங்கள்.
பொதுவாக மாவு பொருட்களில் எடுத்து கொள்வோம்.
இட்லியை வெறுமையாக செய்துகொடுத்தால் சில குட்டீஸ்கலுக்கு பிடிக்கும்;பிடிக்காமலும் இருக்கும்.ஆனால் நான் சொல்வது சிலருக்கு தெரிந்திருக்கலாம்.தெரியாதவ்ர்களுக்கு இட்லியில் சில காய்ந்த திராட்சை மற்றும் சில வண்ண ம் கலந்த பழங்களை சேர்த்து செய்து கொடுத்தால் அவர்கள் விரும்புவர்.
இனிப்பு விரும்புவர்களுக்கு தோசை ஊற்றும் பொழுது அதில் கொஞ்சம் சக்கரை தூவி செய்து கொடுத்தால் விரும்புவர்.
சப்பாத்தி செய்துகொடுக்கும் பொழுது அதில் கொஞ்சம் இனிப்புடன்பிசைந்து செய்து கொடுத்தால் நல்லது.வண்ணம் விரும்பினால் அதில் பழங்களை சேர்த்துக்கொள்ளலாம் .வாழைப்பழங்கள் விரும்பாதவர்களுக்கு சப்பாத்தி மாவில் இந்த பழங்களை சேர்த்து பிசைந்து சுட்டுக்கொடுத்தால் நல்லது. இதை செய்து பாருங்கள்.
உணவு முறைகளில் கொஞ்சம் வித்தியாசமாகவும்
சத்துள்ளதாகவும் செய்து கொடுத்தால் நல்லது.
இப்பொழுது ;ஒரு சின்ன வைத்திய முறை.
குழந்தைகளுக்கு வயிற்றில் புளிப்பு ஏற்பட்டால் அல்லது
பசியில்லாமல் இருந்தாலோ கொஞ்சம் இஞ்சியுடன் பூண்டை சேர்த்துஅரைத்து சார் எடுத்து அதனுடன் தேன் சேர்த்து கொடுத்தால் நல்லது.முதன் முறையாக கொடுக்கும் பொழுது கொஞ்சமாக இஞ்சி செர்த்து கொடுக்க வேண்டும்.ஒரு வயதுக்கு உள் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.இதை நான் பின்பற்றுவதால் உங்களுக்கு சொல்லியுள்ளேன்.