Sunday, September 21, 2008

மூடநம்பிக்கைகள்

கண்மூடித்தனமான ஒன்றுதான் இந்த மூடநம்பிக்கை.கண்ணைமூடிக்கொண்டு நம்பிவிடும் நபர்கள் நம் உலகில் அதிகமாக உள்ளார்கள்.ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் வளர்ந்துகொண்டும்,வந்துகொண்டும் இருப்பார்கள்,
மக்களுக்கு எந்த வகையில் கூறினாலும் ,புரிந்துகொள்ளாமல் போவதுதான் கொஞ்சம் வருத்தபடக்கூடிய விஷயமாகும்.
ஒவ்வொருவருக்கும் மூடநம்பிக்கை பற்றி பல எண்ணங்கள் இருக்கும் இதில் என்னுடைய கருத்தை கூறுகிறேன்.
இந்த மூடநம்பிக்கை படித்தவர்கள்,படிக்காதவர்கள் என்று பார்க்காமல் உள்ளது.இதனால் அவர்கள் மட்டும் இல்லாமல் மற்றவர்களையும் கஷ்டத்திற்குள்ளாக்கிறார்கள்.பில்லி,சூனியம் இவற்றை நம்புவது,குறி சொல்வதை நம்புவது,.இவ்வாறு நம்புவதால் நம் நாட்டில் போலி சாமியார்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.தன்னை நம்புகிறார்களோ இல்லையோ இந்தமாதிரி சாமியார்களை நம்புவார்கள்.
எதுத்துகாட்டிற்கு : மனிதன் முதன் முதலில் புது மனை வாங்கினாலும்,புது வீடு புகுவதினாலும்,வேலைக்கு செல்வதிலும் நாள் கிழமைகளை பார்க்கின்றனர்.சொல்லும் கிழமைகளில் செய்தால் நன்றாக விளங்கும் என்ற நம்பிக்கை.ஏதாவது ஒரு வேலை சரியாக அமையவில்லை என்றால் உடனே கிழமைகளீன் மீது பழியை போடுவது.தான் என்ன தவறு செய்துள்ளோம் என்பதை பார்ப்பது கிடையாது.எவ்வளவு அறிவு உள்ளவர்களும் இந்த விஷயத்தில் அறிவு சற்று குறைவாகவே காணப்படுவர்.
இவர்களின் பகுத்தறிவின்மையால் மூளைக்கு மூளை போலி சாமியார்கள் தோன்றுகின்றனர்.
இன்னும் சில கிராமங்களில் நரபலி என்னும் கொடுமையான விஷயம் அதிகம் நடைபெறுகின்றது.பத்து மாதம் சுமந்து பெறும் குழந்தைகளை இவர்களின் மூடநம்பிக்கையால் அநியாயமாக இழக்கின்றனர்.
அடுத்தது கைகுறி சொல்பவர்கள் .இவர்கள் தெருவுக்கு தெரூ உள்ளனர்.இவர்கள் குறி என்ற பெயரில் வீட்டை நோட்டமிட்டு கொள்ளை அடித்து செல்கின்றனர்..இதை செய்தால் இவ்வளவு நன்மை ,அதை செய்தால் அவ்வளவு நன்மை என்று சொன்னால் போதும் தன் சொத்தை விற்க கூட தயங்கமாட்டார்கள்."பட்டால்தான் தெரியும் "என்று சொல்வார்கள்.ஆனால் நம் மக்கள் பட்டாலும் துடைத்துக்கொண்டு திரும்ப செல்வர்.இவர்களை மாற்ற எத்தனை பெரியார் வந்தாலும் திருந்தமாட்டார்கள்.
ராசிகற்கள்.:இது இப்பொழுது மிகவும் பிரபலமாகிவிட்டது.எந்த ஒரு தொலைக்காட்சி பார்த்தாலும் இதுதான்.கொஞ்சநாள்களுக்கு முன்பு என் தோழியை சந்தித்தேன்.அவள் கையில் ஒரு கல் அணிந்திருந்தாள்.நான் கேட்டதற்கு,தனக்கு நல்ல ஒரு வரண் வரவேண்டும் என்பதற்காக அணிந்திருப்பதாக சொன்னாள்.எனக்கு சிரிப்பு வந்தது.அவளுக்கு வரண் உடனே வரும் என்று விதி இருந்தால் வரும்,ஆனால் அவள் நம்பிக்கை அந்த கல் மீது உள்ளது.சரி கல்லை அணிந்து வரண் வந்ததா என்றால் அதுவும் இல்லை .இதை என் தோழியிடம் கேட்டதற்கு,திருமணம் கூடிவரவேண்டும் என்றால் வேறு நிற கல் அணியவேண்டும் என்று கூறிசென்றாள்.என்செய்வது காலம் ,மூடநம்பிக்கைகள் மனிதனின் மூளையை மழுங்கவைத்துள்ளது.என் தோழியை போல் இன்னும் எத்தனையோ பேர்.
இப்படிதான்,வண்டி இருக்கும் அது நன்றாக ஓடுவதற்கு ஒரு எலுமிச்சை பழத்தை தொங்கவிட்டுருக்கும்.அல்லது அதன் மீது ஏறி வண்டி செல்லும்.கேட்டால் அப்பதான் வண்டி நன்றாக ஓடும் என்று கூறுவர்.உள்ளே எத்தனையோ விஷயங்கள் இருக்கும் ,அதை வைத்து வண்டி ஓடாமல் இந்தபழத்தினால் ஓடும் என்று நம்புவர்.இதை நான் கேலியாக சொல்லவில்லை ,கவலையாக சொல்கிறேன்.
இப்பொழுது விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறிவிட்டது,ஆனால் இந்த மக்கள், இதில் பின் தங்கியுள்ளனர்.
இன்னொன்று மழை .இது இயற்கை சம்பந்தப்பட்டது.இதற்கு ஏதாவது ஒரு மனிதன் இந்த பலன்.அந்த பலன் என்று சொன்னால் அதை செய்வர்.ஆனால் மழை பெய்யுமா என்றால்? அது தெரியாது.இப்படி இன்னும்......
கள்ளிப்பால் கொடுத்து கொள்வது,தலையில் தேங்காய் உடைப்பது,ஆடு பழிகொடுப்பது,குழந்தையை பழிகொடுப்பது,முள்ளில் ஏறி நடப்பது,இப்படி பல விஷயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.இதையெல்லாம் எடுத்து சொன்னால் நமக்கு பெயர் என்ன தெரியுமா ? நாத்திகன் என்று பெயர்.கடவுள் பற்று இருக்கவேண்டும் ,ஆனால் வெறிதனம் இருக்ககூடாது.இதை செய்,எனக்கு அதை செய் என்று எந்த கடவுளும் சொல்லவில்லை.நாம் அதில் செலவலிப்பதற்கு இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவினால் அவர்களின் வாழ்த்து நம்மை வாழ வைக்கும்.
எழுத்தின் மூலம்,பட்டின் மூலம்,கதையின் மூலம்.மற்றும் நகைச்சுவையின் முலம்,எடுத்துகூறினாலும்,இந்த மூடநம்பிக்கை என்னும் விஷ மருந்து தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.என்செய்வது?காலம் செய்த கோலம்...........

No comments: