Friday, September 19, 2008

சுயநலம்-பொதுநலம்

சுயநலம் பொதுநலம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட விஷயம்.ஒவ்வொரு மனிதனின் உண்ர்வுகளை கொண்டுதான் இந்த இரண்டு நலங்களும் அமைகிறது.
சுயநலம் இல்லாத மனிதர்கள் உள்ளார்களா?என்றால் உண்மையாக யாருமே கிடையாது.பொதுநலம் என்பது தானாக உண்டாக்கி கொள்வது .ஆனால் அதிலும் ஒரு சுயநலம் ஒளிந்துகொண்டுதான் இருக்கும்.
அதற்காக பொதுநலம் செய்பவர்களை நான் குற்றம் சொல்லவில்லை.
சுயநலம் என்ற தலைப்பு சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும் ,ஆனால் இந்த தலப்பில் எழுதுவதற்கு காரணம் இதனால் வரும் துன்பங்கள் சலிப்புகள் என்னவென்று சொல்வதற்குதான்.
அதிக சுயநலம் கொண்டவர்களால் உறவுகளின் முன் நல்ல ஒரு பழக்கம் வைத்து கொள்ளமுடியாது.நாம் வாழும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சுயநலவாதியை சந்தித்து கொண்டுதான் இருப்போம்.அவர்கள் சுயநலமானவ்ர்கள் என்பது நமக்கு ஏதாவது ஒரு கஷ்டத்தில் உதவாமல் இருப்பவர்களை கண்டால் நம்க்கு தெரியும்.
முக்கியமாக பெண்களுக்கு சுயநலம் அதிகம் கொண்டவர்களாக இருப்பர்.
பெண்கள் சுயநலமாக இருப்பதற்கு காரணங்கள் கொஞ்சம் நியாயமானதாக இருக்கும்.ஆனால் ஆண்களுக்கு இருப்பது கொஞ்சம் ஆச்சரியப்படகூடியதே.
சுயநலத்தை தந்தை பெரியார் தன்னுடைய எழுத்தில் அழகாக சொல்லியுள்ளார்
"சுய நலத்துக்கு அறிவே தேவையில்லை உணவுக்கு அலைவதும்,உயிரைக்காப்பதும் எந்தச்சீவனுக்கும் இயற்கை.ஒவ்வொரு சீவனிடத்திலும் ஒவ்வொரு அருமையான, அற்புதமான, அதிசயமான குணங்கள் உண்டு என்றாலும் அவற்றையெல்லாம் அந்தந்தச் சீவனின் சுயநலத்துக்கேதான் பயன்படுத்துகின்றன "
சுயநலத்திற்கு அறிவு தேவையில்லை என்றே சொல்லலாம் .
சுயநலம் நல்லதா என்றால் ரொம்ப அறுவருப்பானது என்றே சொல்லுவேன்.
நம்முடைய வாழ்க்கை ,நம்முடை சந்தோஷம், நம்முடைய செல்வம் என்று குறிகோளாடு வாழ்வது ஒரு வாழ்க்கை கிடையாது என்றே நான் சொல்லுவேன்.
நாமே வாழ்ந்து கொண்டிரூந்தால் என்ன லாபம்.நம்மால் இயன்றவரை மற்றவர்களுக்கு செய்யும் உதவிகள் அவர்கள் வாயால் நம்மை வாழ்த்துவது இப்படி இருந்தால் வாழ்க்கை ஒரு அர்த்தமுடையதாக இருக்கும்.
நாம் என்ன நினைக்கிறோம் என்பதை வெளிப்படையாக சொன்னால் பிரச்சனை வராது.சுயநலம் எப்பொழுது உண்டாகிறது ,இயலாமையால் தான்.
அடுத்தது பொதுநலம்.இது இருப்பது போல் சுயநலமாகவும் இருப்பார்கள்,.தன்னம்பிக்கை எந்த மனிதனிடம் அதிகமாக உள்ளதோ அவனிடம் பொதுநலம் அதிகமாக காணப்படும்.
சமூதாயத்திற்கு செய்யப்படும் உதவியே பொதுநலம் என்று குறிப்பீடுவோம்.
சுயநலம் என்பது நம்முடனே பிறந்தது.இரத்தத்தோடு கூடியது.யாரும் சொல்லித்தரத்தேவையில்லை.யாரை பார்த்தும் கற்றுகொள்ளத்தேவையில்லை.ஆனால் பொதுநலமோ அப்படியில்லை.பிறரை பார்த்து வருவது.சொல்லி தெரிவது.உணர்வொஇஒடு கூடியது.மற்றவர்களுக்கு உதவி செய்வது பொதுநலம்தான்.இரத்ததானம்,கண் தானம்,மற்று உறுப்புகளை தானம் செய்வது இவையெல்லாம் பொதுநலமே!...
சுயநலம் என்பது ஒரு பெண் எனலாம் ,பொதுநலம் என்பது ஆண்கள் எனலாம்.ஆகவே பெண் இல்லையேல் ஆண் இல்லை.அதுபோல் சுயநலம் இல்லையேல் பொதுநலம் இல்லை.இப்படி இவ்விருநலங்களை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
ஒரு எடுத்துக்காட்டாக காதலின் சின்னமாக இருக்கும் தாஜ்மஹால் சாஜஹானால் கட்டப்பட்டது என்று அனைவ்ருக்கும் தெரியும்.ஆனால் இது அவருடைய காதலியாகிய மும்தாஜிற்காக கட்டியது ஆகும்,இதை நாம் சுயநலம் என்று சொல்வோமா,இல்லை பொதுநலம் என்று சொல்வோமா.ஆனால் உற்று பார்த்தால் அதை சுயநலம் என்றுதான் சொல்லமுடியும்.அவர் அதை வடிவமைக்கும் போது இது
நம் வாழ்விற்கு பிறகு இந்திய நாட்டின் அதிசயமாக அமையும் என்று நினைக்கவில்லை.தன் காதலுக்காக எழுப்பட்ட ஒரு காவியமாகும்.ஆனால் இப்பொழுது அது அனைவரின் கண்ணுக்கும் ஒரு விருந்தாக உள்ளது.
ஆகவே நம்முடைய சுயநலம் பொதுநலம் கூடிய ஒன்றாகத்தான் இருக்கவேண்டும்.
நான்+நான்=சுயநலம்
நான் +நாம்=பொதுநலம்.

No comments: